Wednesday, March 14, 2018

உலக நுகர்வோர் தினம்

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ஆம் தேதி, உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்க ப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது நடவடிக்கை எடுத்தல்; சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினம். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவ்வேளையில் நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில், நுகர்வோர் உரிமைகள் ஆர்வலர் அன்வர் பசல் இத்தினத்தை சர்வதேச நுகர்வோர் தினமாக அறிவித்தார்.
யார் நுகர்வோர்?

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். உதாரணமாக, தந்தை குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார். இதில் தந்தை வாடிக்கையாளர். அதை சாப்பிடும் (பயன்படுத்தும்) குழந்தை நுகர்வோர். வணிகத்தில் எத்தனையோ விதமான வியாபாரம் நடக்கிறது. இவை நுகர்வோருக்கு சரியான விலையில், சரியான தரத்தில் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. உரிமைகள் என்ன என்பதே தெரியாமல் வியாபாரிகளிடம் நுகர்வோர் ஏமாறுகின்றனர். பணம் மட்டுமே குறிக்கோளாக வியாபாரிகளும் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
நுகர்வோர் உரிமை குறித்த புத்தகங்களை படித்து, நுகர்வோர் உரி¬ மகளை தெரிந்து கொள்ளுங்கள். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமைகள் குறித்த பாடத்தை சேர்க்க வேண்டும். அரசும், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் உரிமைகளையும், அதன் சட்ட திட்டங்களையும் மக்களுக்கு செய்திதாள், "டிவி' உள்ளிட்ட வழிகளில் தெரியப்படுத்த வேண்டும். நுகர்வோர் எதிர்த்து போராடினால் தான், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை, தங்களது பகுதியில் குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுத்த வேண்டும் என இந்நாளில் உறுதி ஏற்போம்.
பாதுகாப்பு உரிமை
உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனையிலிருந்து காக்கப்படும் உரிமை. வாங்கப்படும் பொருள் உடனடி தேவையைப் பூர்த்தி செய்வதோடல்லாமல் நீண்ட நலன்களை நிறைவு செய்வதாகவும் இருக்க வேண்டும்.
பொருட்களை வாங்குவதற்கு முன்பாகப் பொருளின் தரம், சேவை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்குமாறு நுகர்வோர் வற்புறுத்த வேண்டும். அக்மார்க், ஐ-எஸ்-ஐ முதலான தரக் குறியீடுள்ள பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
விவரமறியும் உரிமை
முறையற்ற வியாபாரத்திற்கு எதிராய்த் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருள்களின் தரம் அளவு, திறன், தூய்மை, வரைநிலை, விலை ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கான உரிமை. ஒரு பொருளைத் தேர்வு செய்வதற்கு அல்லது வாங்க முடிவு செய்வதற்கு முன்பு அப்பொருளைப்பற்றி அல்லது சேவையைப் பற்றி முழு விவரங்களை அளிக்குமாறு நுகர்வோர் வற்புறுத்த வேண்டும். இது அவரைப் பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ளச் செய்யும்.
நுகர்வோரின் குறை  தீர்க்கப் பெறுவதற்கான உரிமை
 நியாயமற்ற வியாபார முறைகள், தயக்கமற்ற சுரண்டல் குறைகளைத் தீர்க்கும் உரிமை. நுகர்வோரின் உண்மையான குறைகளை நியாயமான முறையில் தீர்த்து வைப்பதற்கான உரிமையும் இதிலடங்கும். நுகர்வோர் தங்கள் உண்மையான குறைகளை குறித்து புகார் செய்ய வேண்டும். சில சமயங்களில் புகாரின் மதிப்பு சிறியதாய் இருந்தாலும் மொத்ததில் சமூகத்தில் அதன் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கலாம். நுகர்வோர் தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ள நுகர்வோர் அமைப்புக்களின் உதவியையும் பெறலாம். என்ன நுகர்வோரின் உரிமைகளைப் பற்றி புரிந்து கொண்டீர்களா? இனி எதிலும் அலட்சியமாக இருக்காமல் நமது உரிமைகளைக் கேட்டுப் பெறுவோம். 
தேர்வு செய்யும் உரிமை
போட்டி விலைகளில் விற்கப்படும் பலவகைப் பொருட்களை முடிந்தவரை தெளிவாகப் பார்த்துத் தேர்வு செய்யும் உரிமை. ஏகபோக வியாபாரம் என்றால் நியாயமான விலைக்கு திருப்திகரமான தரம், பணி ஆகியவற்றை உறுதி செய்வதற்கான உரிமை.




0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms