Tuesday, August 27, 2013

அஷ்டமியில் ஒரு இஷ்ட தெய்வம்



அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர்இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறதுஅஷ்டமிநவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள்காரணம்இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும்இராமரும் பிறந்துஅதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள்இராம நவமிஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமேபிறகு சாதனையும்சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள்தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களைமிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள்அஷ்டமிநவமி என்பது புனிதமான திதிகள்அவை இறைவனுக்கு உரியவை
தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவைஅத்தனை சிறப்புமிக்கது
தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர்அதனால்தான் இவரை “கண்ணா“ என்கிறோம்அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வதுஇவ்வூலகில் வாழ்வதற்கும்முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்

தர்மன் செய்த தவறு துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோதுதர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன்பாண்டவர்களை கிண்டல் செய்யஅர்ஜூனன் கோபமாக பேசதேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார். “என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். “பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல்சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள்தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர்கிருஷ்ணரை அழைக்கவில்லைஒருவேளை , “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்”   என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன்  கௌரவர்களை ஜெயித்து இருப்பார்இதை திரௌபதி உணர்ந்ததால்தான்துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோதுஅண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள்அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டதுஅதேபோல்போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம்

கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான்மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் 
என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்லஎவரும் மனதால் நினைத்தாலேபோதும்,  மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார்பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன்இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார்அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன்அவர் தன் தந்தையிடம்அசரீரி தன்னிடம்  ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும்,  அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்கசமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும்அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் சொன்னார்தன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார்அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின் உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தனமிதந்து வந்த கட்டைகளை கொண்டு பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார்ஆனால் எவராலும் அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை.  வருத்தத்தில் இருந்தார் அரசர்அப்போது ஒரு கிழவன், “நான் இந்தகட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன்என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும்?” என்று கேட்கஸ்ரீபலராமர்ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல,  அதற்கு அந்த கிழவன், “சரிஅப்படியே செய்கிறேன்ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும்அதுவரை யாரும் ஆலய கதவை திறக்கக்கூடாது” என்றார்அரசரும் சம்மதித்தார்நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல்ஒருநாள் அவசர அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர்சிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர் அப்படியே மறைந்து விட்டார்கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா என்பதை உணர்ந்தார் அரசர்இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல் இருந்ததை கண்டுதன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம் வருந்தினார்அப்போது அசரீரி குரல் ஒலித்தது. “மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்றது அசரீரிகிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை
பகவான் கிருஷ்ணர்நம்மை எப்போதும் காப்பார்அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போதுதேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான்இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர்இறைவனின் குழந்தை நாம்ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான்பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான்அவன்குழந்தை வடிவில் உள்ள தெய்வம்
கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர் கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர்ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள்ஒருநாள் குருபத்தினிகிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார்ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார்அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை
ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார்சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம்மறக்கச் செய்ததுகுசேலருக்கு திருமணம் நடந்ததுகுழந்தைகள் பிறந்தனர்சந்தர்பத்திற்காக காத்திருந்த விதிதன் வேலையை தொடங்கியதுகுசேலன் வறுமையில் வாடினார். “எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லைஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதேஉயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களேதெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர்அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை.
மனைவியின் யோசனையை ஏற்று குசேலன்கிருஷணரை சந்திக்க புறப்பட்டார்அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். “பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள்கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களேஇதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறதுகொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர்.

கிருஷ்ணபரமாத்மாவை பார்க்ககுசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர்குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். “அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர்
குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான்அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். “அடேங்கப்பாஎன் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர்குசேலரும் சிரித்துவிட்டார்கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை
நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார்அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டுஎல்லாம் கிருஷ்ணரின் செயலேஎன்று மகிழ்ந்து போனார் குசேலர்
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடுசுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்
பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மாதம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார்கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்
அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

18 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை.... அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.....

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

aturview said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனிய ஜன்மஷ்டமி தின வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எல்லோர்க்கும் கோகுலஷ்டமி தின வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.க்ரிஷ்ன ஜயந்தி வாழ்த்துக்கள்

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

படித்தேன் மகிழ்ந்தேன் .எனது கிருஷ்ன ஜெயந்தி வாழ்த்துக்கள்

JOHN FEET said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இறைவனையும் குழந்தையாய் பாவிக்கும் மனோபாவம் தந்த இறைவனுக்கு நன்றி..அனைவருக்கும் எனது கிருஷ்ன ஜெயந்தி வாழ்த்துக்கள்.

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொண்டாடுவோம் அனைவருக்கும் எனது கோகுலஷ்டமி வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

படங்கள் அருமை. மனதில் பசுமையாக நிற்கிற்து. வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே இப்பாடலை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் மடியில் கண்ணன் அமர்ந்து பாடல்கள் கேட்பானாம். அதனால் அவர் தொடையை தட்டி தாளம் போடாமல் பாடுவாராம். அத்தகை சிறப்புமிக்க இந்த ஊத்துக்காட்டில் காலிங்க நர்த்தனனாக இருக்கும், கண்ணனை வழிபடுவதன் மூலம் பகையை வெல்லலாம்.அனைவருக்கும் எனது கிருஷ்ன ஜெயந்தி வாழ்த்துக்கள்.

bushrocket said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களை பெற்றிடுவோம்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.அனைவருக்கும் எனது கோகுலஷ்டமி வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எல்லோர்க்கும் கிருஷ்ன ஜெயந்தி வாழ்த்துக்கள்.கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

very fine. Happy Jama Astami

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Hai Santhosh

Happy Krishna Jayanthi

-Vanmigi

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

shanker sir thank you

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thanks Shanker sir for the truthful story in a good day.

அருமையான கதை குசேலன் செய்த பாவ செயல், அவன் பாவத்தை தீர்கும் வரை கஷ்ட்டபட்டான். பாவதின் பலன் தன்டனை.ஆனால் செய்த தவரை உணர்ந்து க்ரிஷ்னர் பரமாத்மாவிடம் மன்னிப்பு கேட்டால் நிச்சியம் பரிசிலனை செய்வார்.

SK

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms